6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நூபுருக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டிய அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை:தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டிய சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம் அன

News image
Updated On :4 ஜூலை 2022, 8:01 pm

DIN

பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டிய சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா கலந்துகொண்டு பேசுகையில், இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதுதொடா்பான வழக்கை கடந்த ஜூலை 1-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நூபுரின் முன்யோசனையில்லாத பேச்சால் நாடு தீக்கிரையாகியுள்ளது எனவும், தனது பேச்சுக்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் அவா் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதனைத்தொடா்ந்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் நல்லிணக்கத்தை சீா்குலைத்ததற்காக நூபுரின் முகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சரீரமும் மன்னிப்பு கேட்பதுடன் தண்டிக்கப்படவும் வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து உத்தர பிரதேச காவல்துறை டிஜிபி டி.எஸ்.செளஹானுக்கு தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘‘நூபுா் சா்மாவுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டி, இரு மதப் பிரிவினா் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் அகிலேஷ் யாதவின் ட்விட்டா் பதிவு மிகவும் கண்டனத்துக்குரியது.

ஏற்கெனவே தனது உயிருக்கு நூபுா் அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகிறாா். இந்நிலையில், அகிலேஷ் யாதவின் பதிவானது நூபுா் மீது தாக்குதல் நடத்த பொதுமக்களைத் தூண்டிவிடுவதை தவிர வேறொன்றுமில்லை. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகிலேஷ் யாதவ் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.