சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

என்கவுன்டர்: பெற்றோர் கேட்டுக்கொண்டதால் சரணடைந்த பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். 

News image
பேச்சுவார்த்தையில் பெற்றோர்
Updated On :6 ஜூலை 2022, 10:16 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) அதிகாலை காவல் துறையினர் என்கவுன்டரில் ஈடுபட்டனர். குல்காம் மாவட்டத்தின் ஹதிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து இன்று அதிகாலை களமிறங்கிய காவல் துறையினர், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பயங்கரவாதிகளும் காவல் துறையினரை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனிடையே பயங்கரவாதிகளின் பெற்றோர்கள் மூலம் காவல் துறையினர் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

காவல் துறையின் ஒலிப்பெருக்கி மூலம் பேசிய பெற்றோர்கள் தங்கள் மகன்களை சரணடையுமாறு வேண்டி கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.