புது தில்லி: மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்ற 57 உறுப்பினர்களில் 27 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 57 பேரில் 14 பேர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று புதிதாக தேர்வான 27 பேரும், அவைத் தலைவர் வெங்கைய நாயுடு முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க | சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
இன்று பதவியேற்றுக் கொண்ட 27 எம்.பி.க்களில் 18 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பேரும் பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். 12 பேர் ஹிந்தியிலும், 4 பேர் ஆங்கிலத்திலும், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, ஒரியா மொழிகளில் தலா இருவரும், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் தலா ஒருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 57 பேரில், முன்னதாக நான்கு பேர் ஏற்கனவே பதவியேற்றுக் கொண்டனர். இன்று பதவியேற்றுக் கொள்ளாத மற்றவர்கள், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலிருந்து வரும் ஜூலை மாத இறுதியில் 72 உறுப்பினர்கள் ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


