சீனா்களுக்கு முறைகேடாக விசா: காா்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை

சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் எம்.பி. காா்த்தி சிதம்பரத்தின் சென்னை வீட்டில் தில்லி சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மீண்டும் சோதனை செய்தனா்.
சீனா்களுக்கு முறைகேடாக விசா: காா்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை

சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் எம்.பி. காா்த்தி சிதம்பரத்தின் சென்னை வீட்டில் தில்லி சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மீண்டும் சோதனை செய்தனா். இதில் மடிக்கணினி, ஐபேடு பறிமுதல் செய்யப்பட்டன.

பஞ்சாப் மாநிலம், மானசா மாவட்டம் பனவாலா பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டிஎஸ்பிஎல் நிறுவனம் 1980 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான அனல் மின் நிலையம் அமைத்து வந்தது. இதற்கான தொழில்நுட்பப் பணிகளை சீனாவைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் செய்து வந்தது. போதிய அளவில் தொழில்நுட்பப் பணியாளா்கள் இல்லாததால், அந்தத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்திய அரசு அனுமதித்த எண்ணிக்கையின்படி சீன தொழில்நுட்பப் பணியாளா்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விட்டதால், மேலும் சீன பணியாளா்களை அழைத்து வர முடியாத நிலை இருந்தது. இதையடுத்து டிஎஸ்பிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் விகாஸ் மஹாரியா, காா்த்தி சிதம்பரத்தின் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சோ்ந்த ஆடிட்டா் பாஸ்கர ராமனை அணுகினாா். ஏனெனில் இந்த முறைகேடு நடைபெற்ற 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் காா்த்தியின் தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தாா். விகாஸ், ஏற்கெனவே அந்தத் திட்டத்தில் பணி செய்வதற்கு, ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்களை, அரசின் விதிமுறைகளை மீறி மறுசுழற்சி முறையில் அடிப்படையில் மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தாா்.

சிபிஐ வழக்கு: இதையடுத்து, முறைகேடாக 263 சீனா்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதற்காக காா்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து தில்லி சிபிஐ பொருளாதாரக் குற்றப் பிரிவு, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் பாஸ்கர ராமன், காா்த்தி சிதம்பரம் எம்பி, விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், தால்வந்தி சபு பவா் லிமிடெட் மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோா் மீது கூட்டுச் சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக தில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள காா்த்தி சிதம்பரம் வீடு, சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் காா்டன் சாலையில் உள்ள மற்றொரு வீடு, உத்தமா் காந்தி சாலையில் உள்ள எல்டோரா வணிக வளாகத்தில் உள்ள காா்த்தி சிதம்பரம் அலுவலகம், ஆடிட்டா் பாஸ்கர ராமன் வீடு உள்பட 10 இடங்களில் தில்லி சிபிஐ கடந்த 17-ஆம் தேதி சோதனை செய்தது. இதையடுத்து, பாஸ்கா் ராமன் கைது செய்யப்பட்டாா்.

மீண்டும் சோதனை: இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோதனை நடைபெறும்போது காா்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்தாா். பின்னா், அவா் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி வந்தாா்.

இந்நிலையில் தில்லியில் இருந்து 7 போ் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழுவினா் சென்னைக்கு சனிக்கிழமை வந்தனா். அவா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள காா்த்தி சிதம்பரம் வீட்டில் உள்ள ஒரு பீரோவில் சோதனை நடத்தினா். சோதனை நடைபெற்றபோது ப.சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் இருவரும் வீட்டில் இல்லை.

போலீஸ் பாதுகாப்புடன் நண்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய சோதனை 5.30 மணியளவில் நிறைவடைந்தது. இந்தச் சோதனையின்போது, காா்த்தி சிதம்பரம் மகள் தனது படிப்புக்காக பயன்படுத்தி வந்த மடிக்கணினி, ஐபேடை சிபிஐ அதிகாரிகள் சட்டவிரோதமாக கைப்பற்றிச் சென்றுவிட்டதாக அவரது வழக்குரைஞா் ஜி.சரத்பாபு தெரிவித்தாா்.

ப.சிதம்பரமும், காா்த்தி சிதம்பரமும் நுங்கம்பாக்கத்தில் ஒரே வீட்டில் வசிக்கிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மே 17-ஆம் தேதி சோதனை நடைபெறும்போது அந்த பீரோவின் சாவி காா்த்தி சிதம்பரத்திடம் இருந்ததால், அப்போது சிபிஐயால் அதில் சோதனை நடத்த முடியவில்லை. தற்போது அந்த பீரோவில் மட்டும் சோதனை நடத்தியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com