காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தொடர்ந்து உயரும் எரிபொருள்களின் விலை: பிரதமரை விமர்சிக்கும் ராகுல் காந்தி

எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :9 ஜூலை 2022, 4:22 pm IST

எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி, நாட்டு மக்கள் பிரதமரினால் ஏற்படுத்தப்பட்ட தடைகளான காஸ் சிலிண்டர்,பெட்ரோல் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்பின்மை போன்றவற்றால் சோர்வடைந்துள்ளனர். எரிபொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவின் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை அவரது 125வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக திறந்து வைத்துப் பேசினார். அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அல்லூரி சீதாராம ராஜூ ஆங்கிலேயர்களை எதிர்த்து “தைரியமிருந்தால் என்னைத் தடுங்கள்” என முழக்கமிட்டதாகப் பேசினார். மேலும், நாட்டு மக்களும் அவரைப் போலவே தாங்கள் சந்திக்கும் சவால்களை அவர் கூறிய அதே முழக்கத்தை எழுப்பி வீரமாக சந்திப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உயர்ந்து வரும் எரிபொருள்கள் விலை குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ 133 கோடி மக்களும் தாங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தைரியமிருந்தால் எங்களை தடுங்கள் என வீரமாக கூறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியின் கீழ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 157 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. வேலைவாப்பின்மை சுனாமியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் மக்கள் இந்த சவால்களையெல்லாம் உருவாக்கியது பிரதமர்தான் எனக் கூறி வருகின்றனர். மேலும், மக்கள் சோர்வடைந்து விட்டனர். இதை நிறுத்துங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.