மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ம.பி.: கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கி 16 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜூலை 2022, 7:05 am

DIN

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை காலை, ஷிவ்புரியில் மின்னல் தாக்கியதில் 60 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவரின் மகன் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளியன்று, ஷியோபூர் மாவட்டத்தில் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற 6 கல்லூரி மாணவர்களுக்கு மின்னல் தாக்கப்பட்டதில் 3 பேர் பலியாகினர். 3 பேர் கடுமையாக காயமடைந்து குவாலியர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பிண்டில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சுகந்த் கிராமத்தில் ராம்காலி (70) மற்றும் ஞானோதேவி (40) என 2 பெண்கள் மின்னல் தாக்கி பலியாகினர்.

சத்தர்பூரில், மஹராஜ்கஞ்ச் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாயும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே மின்னலுக்கு பலியாகினர். இதேபோன்று  அமர்வான் கிராமத்தில் மற்றொரு 50 வயது பெண் விவசாயி மின்னலுக்கு பலியானார்.

மற்ற சம்பவங்களில், ஷிவ்புரியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரும், குவாலியரில் 30 மற்றும் 40 வயதுடைய 2 பேர்  இதே காரணத்தால் இறந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷியோபூர், ஷிவ்புரி, குணா, அகர், ராஜ்கர், நீமுச், மண்ட்சௌர், உஜ்ஜைன், பிந்த், ரத்லாம், தோலவாட், ஷாஜாபூர் போன்ற பகுதிகள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.