தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தெலங்கானாவில் தொடர் மழை: பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்

தொடர் கனமழையைக் கருத்தில் கொண்டு தெலங்கனா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2022, 6:02 pm IST

ஹைதராபாத்: தொடர் கனமழையைக் கருத்தில் கொண்டு தெலங்கனா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 16 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பு காரணமாக அரசு முன்பு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளிகள் ஜுலை 14 திறக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விடுமுறையை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு, உதவி பெறும் மற்றும் தனியார்) விடுமுறையை ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

ஜூலை 18 முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி வரை அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.