ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வியாழக்கிழமை கேரளம் வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 2,283 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வீணா ஜார்ஜ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குரங்கு அம்மை: மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளதாகவும் மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பதி தரிசனம்! ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி!
திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட முடிவு!

சிலிண்டர் தட்டுப்பாடு: அச்சம் வேண்டாம்; மத்திய அரசுக்கு துணை நிற்போம்! - முதல்வர்

தென் தமிழகத்தில் மார்ச் 18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

