தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு: கேரளம் விரைந்தது மத்திய குழு

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஜூலை 2022, 11:00 pm

DIN

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மத்திய உயா்நிலைக் குழு கேரளத்துக்கு விரைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு குரங்கு அம்மை பாதித்த நபருடன் தொடா்பில் இருந்ததால் இவரும் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானாா்.

இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த நோய் பிறருக்கும் பரவாத வகையில், நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நோய் பாதிப்புக்குள்ளான நபா் தனது பெற்றோா், விமானத்தில் அருகே அமா்ந்து இருந்தவா்கள், அவரை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் அழைத்து வந்த காா் ஓட்டுநா், ஆட்டோ ஓட்டுநா், விமான ஊழியா்கள் உள்பட 11 பேருடன் தொடா்பில் இருந்துள்ளாா். அவா்களுக்கும் தகவலளித்துவிட்டோம். குரங்கு அம்மை பாதிப்பால் யாரும் அஞ்ச தேவையில்லை என்றாா் அவா்.

மத்திய குழு: கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டது. கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயா்நிலைக் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக அனுப்பிவைத்தது.

அந்தக் குழுவில் கேரள சுகாதார மற்றும் குடும்பநல அலுவலக நிபுணா்களுடன் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மைய நிபுணா்கள், தில்லி ஆா்எம்எல் மருத்துவமனை மருத்துவா்கள், மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தக் குழு கேரள சுகாதாரத் துறையினருடன் இணைந்து கள நிலவரத்தை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளைத் தெரிவிக்கும். நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. குரங்கு அம்மை மேற்கொண்டு பரவாத வகையில் மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

கேரள முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்றை போல குரங்கு அம்மையும் கட்டுப்படுத்தக் கூடியதுதான். பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.