புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பிகாரில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு

பிகாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது. 

News image
Updated On :15 ஜூலை 2022, 3:45 pm IST

பிகாரில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது. 

வைஷாலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு  ஆடைக் கட்டுப்பாடு விதித்து அம்மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் வீரேந்திர நாராயண் அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அறிவிப்பின்படி, ஆசிரியர்கள் ஜீன்ஸ், கால்சட்டை, டி-சர்ட், குர்தா-பைஜாமா போன்ற உடைகள் அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பேன்ட் மற்றும் முழு அல்லது அரைக்கை சட்டை அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக பிகாரின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் பணி நேரத்தில் குர்தா-பைஜாமா போன்ற சாதாரண உடைகளில் காணப்படுகின்றனர். 

சமீபத்தில் பகுதார் பஞ்சாயத்தின் பெண்கள் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குர்தா-பைஜமா அணிந்திருப்பதை, லக்கிசராய் மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் சிங் கடுமையாக விமர்சித்தார். 

ஆசிரியர்கள் இதுபோன்ற ஆடை கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், மாணவர்கள் மத்தியில் தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, கல்வித் துறையின் மீதும் மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். 

மாணவர்களின் முன் ஆசிரியர்கள், கண்ணியமாகவும், அவர்களின் உருவம் மாணவர்களுக்கு உத்வேகத்தையும் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எனவே, இதை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளோம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.