நாட்டில் புதிதாக 18,301 பேருக்கு தொற்று; மேலும் 56 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,301 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று(வெள்ளிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,038 ஆக இருந்தது.
கரோனா தொற்றுக்கு மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,25,660 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,40,760 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவீதமாக உள்ளது.
கரோனாவில் இருந்து மேலும் 18,301 போ் குணமடைந்துள்ளனா். இதனால் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,30,63,651 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,99,47,34,994 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 18,92,969 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...