சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்: நாட்டிலேயே முதல் மாவட்டமான பர்கான்பூர் மக்களுக்கு மோடி வாழ்த்து

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2022, 6:58 am

DIN

நாட்டிலேயே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமான மத்தியப் பிரதேசத்தின் பர்கான்பூர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு  பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“இத்தகைய குறிப்பிடத்தக்க, போற்றத்தக்க சாதனையை நிகழ்த்தியதற்காக பர்கான்பூர் மாவட்டத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். 

மக்களின் கூட்டுமுயற்சியும், ஜல் ஜீவன் இயக்கம், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசின் துரிதமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு கூட்டு மனப்பான்மை இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது” என்று மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.