மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த நக்சல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நக்சலைட் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :26 ஜூலை 2022, 6:46 am

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நக்சலைட் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடேகல்யாண் கவால் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாப்ரமெட்டாவைச் சுற்றியுள்ள வனத்தில் நக்சல்களுக்கும், மாவட்ட ரிசர்வ் காவலர்களுக்கு ம் இடையே மோதல் ஏற்பட்டது. 

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்களை நக்சல்கள் குறிவைத்துத் தாக்கியனர். 

அப்பகுதியில் ​​பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல் ஒருவரின் உடலை மீட்டனர். இது சட்டவிரோத இயக்கத்தின் கடேகல்யான் பகுதிக் குழு உறுப்பினர் புத்ரம் மார்க்கம் என அடையாளம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மார்கம் மீது 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவரைப்  பற்றி அடையாளம் தருவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்திருந்தனர். 

பாதுகாப்புப் படையினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.