சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை: நாளையும் ஆஜராக உத்தரவு
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது.


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது.
காலை மற்றும் பிற்பகல் என 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார்.
கடந்த 21-ஆம் தேதி சோனியா காந்தியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடைபெற்றது.
காலையில் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் தொடங்கிய விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளையும் அலமாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...