
மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அனுப்பூர்-ஆம்லை சாலையில் உள்ள உணவகம் அருகே காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் வர்மா தெரிவித்தார்.
அனுப்பூரில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள ஆம்லை நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், சாலையில் நாயைக் காப்பாற்றும் முயற்சியில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.