தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பி. இடைநீக்கம்

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

News image
அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்
Updated On :27 ஜூலை 2022, 6:49 am

DIN

மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தின் போது காகிதங்களை கிழித்து அவைத் தலைவரின் இருக்கை முன்பு எறிந்த காரணத்திற்காக இந்த வாரம் முழுவதும் கூட்டத்தில் பங்கேற்க சஞ்சய் சிங்கிற்கு தடை விதித்து அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அமளியில் ஈடுபட்டதற்காக மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.