வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி: பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி: பிரதமர் வாழ்த்து
Updated on
1 min read

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணியின் உறுதித் தன்மையால் இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கினார். எனினும் அவரை விட ஒரு கிலோ எடையை கூடுதலாக தூக்கியதன் மூலம் நைஜீரியாவின் அதிஜாத் அதேனிக ஒலாரினோயே தங்கப் பதக்கம் வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com