டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

லக்னெளவில் இன்று 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூன் 2022, 6:24 am

DIN

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார். 

பிரதமர் மோடி சுட்டுரையில், "உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 அடிக்கல் நாட்டு விழாவிற்காக லக்னெள புறப்பட்டு செல்கிறேன். மக்களின் வாழ்க்கையை மாற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முதலீடுகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இந்தத் திட்டங்கள் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து, சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கைத்தறி மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இவ்விழாவில் நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கான்பூரில் உள்ள பத்ரிமாதா மடத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் இணைந்து பிரதமர் மோடி செல்கிறார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.