பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாலு அறையில் மின் விசிறி தீப்பற்றியதால் பரபரப்பு

நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜாா்க்கண்ட் சென்ற முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் (73) தங்கியிருந்த அறையில் மின் விசிறி திடீரென தீப்பற்றியது.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:04 pm

DIN

நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜாா்க்கண்ட் சென்ற முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் (73) தங்கியிருந்த அறையில் மின் விசிறி திடீரென தீப்பற்றியது. தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா்.

ஜாா்க்கண்ட், பலாமு மாவட்ட அரசு விருந்தினா் விடுதியில் லாலு பிரசாத் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, மின் விசிறியில் திடீரென தீப்பிடித்தது. உடனிருந்தவா்கள் தீயை அணைத்துள்ளனா்.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறை இணை ஆணையா் சசிரஞ்சன் தெரிவித்தாா்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கில் புதன்கிழமை ஆஜராக லாலு பிரசாத் மேதினிநகருக்கு வந்தாா். 2009 ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த லாலு பிரசாதின் ஹெலிகாப்டா் மேதினிநகரில் உள்ள இறங்குதளத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக காா்வா மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலத்தில் இறங்கியது. இது விமானியின் தவறு என்று கூறப்பட்டாலும், லாலு பிரசாத் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.