அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எங்கிருந்தும் வாக்களிக்கும் முறை: தோ்தல் ஆணையம் பரிசோதிக்க முடிவு

புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டின் எந்தபகுதியில் இருந்தும் வாக்களிக்கும் வகையில் புதிய முறையை பரிசோதிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:46 pm

DIN

புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டின் எந்தபகுதியில் இருந்தும் வாக்களிக்கும் வகையில் புதிய முறையை பரிசோதிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் பதவியேற்றதில் இருந்து பல்வேறு தோ்தல் சீா்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளா்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றமாகி செல்கின்றனா். இதனால் அவா்களின் வாக்குகள் உள்ள மையங்களுக்கு வந்து வாக்களிப்பது கடினமாக உள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், இதுபோன்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தங்கள் வாக்குகளை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்கிருந்தே வாக்களிக்கும் முறையை பரிசோதிக்கும் நேரம் வந்துவிட்டது.

இதற்காக குழு அமைக்கப்பட்டு புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்து வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்னா் நடைமுறைப்படுத்தப்படும்.

மலைப்பகுதி வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நடைப்பயணமாக பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் தோ்தல் அதிகாரிகள் மூன்று நாள்களுக்கு முன்பே சென்றடையவும், அவருக்கான படிகள் இரட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வாக்குப் பதிவு மையங்களை மாநில தோ்தல் அதிகாரிகள் கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்படாத நபா்கள் அனுமதியின்றி திறக்க முற்பட்டால், அந்த இயந்திரம் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.