நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

4 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு: மத்திய அரசு

கேரளம், கர்நாடகா மகாராஷ்டிரா, தில்லி ஆகிய நான்கு மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூன் 2022, 7:40 am

DIN

கேரளம், கர்நாடகா மகாராஷ்டிரா, தில்லி ஆகிய நான்கு மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,420 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நேற்று 5,233 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒருநாளில் 2 ஆயிரம் அதிகரித்துள்ளது. 

மேலும் சிகிச்சைப் பலனளிக்காமல் 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,24,723 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், கேரளத்தில் கரோனா பாதிப்பு 2,500ஐ தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கும், தில்லியில் ஒருநாள் பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. மேலும் மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 1.765 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக 4 மாநிலங்களில், பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.