எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனாவில் விமான விபத்து: பல வீடுகள் எரிந்து நாசம்

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 

News image
Updated On :9 ஜூன் 2022, 7:43 am

DIN

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் நிகழும் மூன்றாவது விமான விபத்து இதுவாகும். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாஹெகோவ் நகரில் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்து பாராசூட் தாக்கியதில் விமானி சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார். விபத்து நடந்த இடத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிவதை சீன சமூக ஊடகங்களில் விடியோக்கள் மூலம் பரவி வருகின்றது. 

விபத்து நடந்த பகுதிக்கு அவசர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் விரைந்துள்ளனர். 

கடந்த மாதம், 122 பேருடன் சென்ற சீனாவின் திபெட் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் நாட்டின் தென்மேற்கு சோங்கிங் நகரில் புறப்படும்போது ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்.

மார்ச் 12 அன்று, குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற போயிங் 737 விமானம் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியின் தெங்சியன் கவுண்டியில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த ஒன்பது பணியாளர்கள் உட்பட 132 பேரும் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.