தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஒருவர் பலி

தில்லி ரோகினி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:36 am

DIN

தில்லி ரோகினி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

தில்லி ரோகினி பகுதியில் உள்ள பிரம்ம சக்தி மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்து. இதன் மூன்றாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்து மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்ததையடுத்து, 

சம்பவ இடத்துக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவசரமாக மருத்துவ நிர்வாகம் அப்புறப்படுத்தினர். 

இதனால், ஆக்ஸிஜன் உதவி செயலிழந்ததால் 64 வயதான நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இவர் ஒருவரைத் தவிர அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவை (DFS) இயக்குனர் அதுல் கர்க் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.