டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குஜராத்தில் 2 நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை

குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:31 am

DIN

குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மனோரமா மொகந்தி கூறுகையில், 

பொதுவாக மாநிலத்தில் பருவமழை ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 2 நாள்களுக்கு முன்னதாகவே குஜராத்தைத் தொட்டுள்ளது. 

குஜராத்தின் சில பகுதிகளில் பருவமழை அதிகரிப்பதற்கான சூழ்நிலை சாதகமாக இருப்பதாகவும், அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சௌராஷ்டிரா-கட்ச் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ-டாமன் மற்றும் தாத்ரா நகர் ஹவேலி என குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு குஜராத்தில் உள்ள மஹிசாகரில் அதிக மழை பெய்து வருகிறது. இதுவரை அங்கு 76 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று சூரத், கெடா, ஆரவல்லி, அகமதாபாத் மற்றும் ஆனந்த் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. 

மோர்பி மாவட்டத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.