கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எம்பிக்கள் மீது காவல்துறை தாக்குதல்? ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு ஆதரவாக அமலாக்கத்துறையைக் கண்டித்து அக்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்

News image
Updated On :16 ஜூன் 2022, 10:52 am

DIN

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு ஆதரவாக அமலாக்கத்துறையைக் கண்டித்து அக்கட்சி எம்பிக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மூன்றாவது முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி நேரில் ஆஜராகினார். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகாக மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். 

மேலும் ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், அமலாக்கத்துறையைக் கண்டித்தும் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களைக் காவல்துறை கைது செய்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது காவலர்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களது ஆடைகளைக் கிழித்தும் அத்துமீறியதாக அக்கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அத்துமீறியும் நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அதிரஞ்சன் செளத்ரி தலைமையில் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்து காவல்துறையின் மீது புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.