கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜூன் 20 வரை ஆஜராக முடியாது: அவகாசம் கோரும் ராகுல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரியுள்ளார்.

News image
Updated On :16 ஜூன் 2022, 2:07 pm

DIN


நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி அவகாசம் கோரினார். இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு புதிய அழைப்பாணை அனுப்பியது அமலாக்கத் துறை.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த மூன்று நாள்களாக அமலாக்கத் துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் இதுவரை மொத்தம் 30 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது நாளாக புதன்கிழமை விசாரணை நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. வெள்ளிக்கிழமை ஆஜராவதற்கு ராகுல் காந்தி அவகாசம் கோரியதால், அமலாக்கத் துறை அதற்கு அனுமதியளித்தது.

இந்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலையைக் காரணம் காட்டி ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்ககோரி அமலாக்கத் துறையிடம் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ராகுல் காந்தியின் இந்தக் கோரிக்கைக்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.