தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டில் முன்கூட்டியே 75 நாள் யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே நடைபெறும் யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று தில்லியில் உள்ள புராண கிலா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்தய அமைச்சர்கள் மீனாட்சி லேகி மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.