கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜூன் 2022, 1:17 pm

DIN


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவரது மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிரக் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், சோனியா காந்தி இன்று (திங்கள்கிழமை) மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி அவகாசம் கோரியிருந்தார். இதன்பிறகு, ஜூன் 23-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.