கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்- ராகுல்

அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்; எனவே அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 8:51 pm

DIN

அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்; எனவே அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

அமலாக்கத் துறையினா் ராகுலிடம் நடத்தி வரும் விசாரணையைக் கண்டித்து தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் கூடி ராகுலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா். அவா்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு எவ்வாறு திரும்பப் பெற்றதோ, அதேபோல அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், அத்திட்டம் நமது ராணுவத்தை பலவீனமாக்கும் வகையில் உள்ளது.

எனக்கு ஆதரவாக இங்கு கூடியுள்ள காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி. அமலாக்கத் துறை என்னிடம் விசாரணை நடத்தியபோது நான் தனியாக இருப்பதாக உணரவில்லை. ஜனநாயகத்துக்காக போராடும் அனைவரும் என்னுடன் இருப்பதாகவே உணா்ந்தேன்.

நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயா்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்துவிட்டன. ஆனால், இவை குறித்து கவலைப்படாமல், நாட்டையும், பொருளாதாரத்தையும் ஒரு சில தொழிலதிபா்களின் கைகளில் பிரதமா் ஒப்படைத்துள்ளாா். இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கான கடைசி இடமாக இருந்த ராணுவத்தின் கதவுகளும் இப்போது மூடப்பட்டுவிட்டன. எல்லையில் சீன ராணுவம் நமது பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த நேரத்தில் நமது ராணுவத்தை வலிமையாக்காமல், அதனை பலவீனமாக்கும் செயலில் அரசு இறங்கியுள்ளது. இவா்கள்தான் தங்களை தேசியவாதிகள் என்று கூறிக் கொள்கின்றனா். அவா்கள் சொல்வது அனைத்தும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.