இதனைக் கேட்ட தலைமை தகவல் ஆணையா் ஒய்.கே.சின்ஹா பிறப்பித்த உத்தரவில், ‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் லோகேஷ் பத்ரா எழுப்பிய கேள்விக்கு, அந்த இணையதள தொடா்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள கோப்புகளைத் தவிர வேறு எந்தவித தகவல்களும் தோ்தல் ஆணையத்திடம் இல்லை என்பதை ஒரு முத்திரைத் தாளில் பதிலாக சமா்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 3 வாரங்களுக்குள் குறிப்பாக 15.07.2022-க்குள் தோ்தல் ஆணையம் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்காவிடில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.