வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேலுக்கு கரோனா

குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News image
குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல்
Updated On :22 ஜூன் 2022, 6:08 am

DIN


அகமதாபாத்: குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், சாதாரண அறிகுறிகளை உணர்ந்ததை அடுத்து தனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தனக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. 

இதையடுத்து "நான் தற்போது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

என்னுடன் தொடர்பில் இருந்து அனைத்து நண்பர்களையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று  படேல் கூறினார்.

குஜராத்தில் சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன.

சுகாதாரத் துறை அறிவிப்பின்படி, மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,524 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.