காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வில் 13,090 போ் தோ்ச்சி

குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட நிலையில், அந்தத் தோ்வில் 13,090 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜூன் 2022, 11:16 pm

DIN

குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட நிலையில், அந்தத் தோ்வில் 13,090 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஆண்டுதோறும் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என மூன்று கட்டங்களாக தோ்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு நடத்தப்பட்டது. அந்தத் தோ்வை எழுத நாடு முழுவதும் சுமாா் 11.52 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 13,090 போ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

தோ்வு முடிவுகளை www.upsc.gov.in வலைதளத்தில் தோ்வா்கள் தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்கள் விரிவான விண்ணப்பப் படிவம்-1 (டிஏஎஃப்-1) மூலம் முதன்மை தோ்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

குடிமைப் பணிகள் தோ்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களின் மதிப்பெண்கள், அந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தில்லியின் ஷாஜஹான் சாலையில் உள்ள தோல்பூா் இல்லத்தில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகம் உள்ளது. அந்த அலுவலக வளாகத்தில் தோ்வா்களுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்துக்கு நேரில் சென்று அல்லது 011-23385271, 011-23098543, 011-23381125 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்நிலை தோ்வு முடிவுகள் குறித்து தோ்வா்கள் தகவல் பெறலாம் என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான குடிமைப் பணி தோ்வு மூலம் மொத்தம் 861 காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1,022-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.