இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.60,000 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இருப்பவர்.
இந்நிலையில். அதானியின் 60-வது பிறந்தநாளான இன்று அவருடைய குடும்பத்தினர் இந்தியா முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கு ரூ.60,000 கோடியை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.