லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராகுல் அலுவலக தாக்குதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல: யெச்சூரி

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜூன் 2022, 6:36 am

DIN


வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, மலைப் பகுதிகளில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் (எஸ்எஃப்ஐ) நேற்று (வெள்ளிக்கிழமை) பேரணி சென்றனர்.

அப்போது சுமார் 100 பேர் வரை எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்தை சூறையாடினர். இதில் தொடர்புடைய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, சீதாராம் யெச்சூரி இன்று (சனிக்கிழமை) தெரிவித்ததாவது:

"வயநாட்டில் நிகழ்ந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என நாங்கள் தெரிவித்துள்ளோம். அதைக் கண்டித்துள்ளோம். கேரள முதல்வரும், கேரள அரசும் இதைக் கண்டித்துள்ளது. இந்தப் பொறுப்பற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் மீது காவல் துறையினர் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர்" என்றார் அவர்.

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் (காங்கிரஸ்) விடுத்துள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கு கட்டமைக்கப்பட்ட மாஃபியாவாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.