ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அவசர நிலையை மறக்கக் கூடாது: பிரதமர் மோடி

1975-இல் அவசர நிலையின்போது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஜூன் 2022, 8:35 am

DIN


1975-இல் அவசர நிலையின்போது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இன்று 90-வது மன் கி பாத் நிகழ்ச்சி. இதில் அவசர நிலை காலத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பிரதமர் உரை:

"அவசர நிலை காலத்தில் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இத்துடன் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21-ன் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமைகளும் பறிக்கப்பட்டன. அந்த நேரத்தில் நீதிமன்றங்கள், அரசியலமைப்பின் அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஜனநாயகத்தை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மிகவும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டது. ஒப்புதல் இல்லாமல் எதையும் வெளியிட முடியாது. பிரபல பாடகர் கிஷோர் குமார் அரசைப் பாராட்ட மறுத்தபோது, அவர் தடை செய்யப்பட்டதும், ரேடியோவில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. 

ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கானோர் மீது கொடுமைகள் ஏவப்பட்டது என பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தின் மீது இந்தியர்களுக்கு இருந்த நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. 

பல நூறாண்டுகளாகவே ஜனநாயகத்தின் விழுமியங்கள் நம்முள் ஊறிப்போயுள்ளன. நம் நரம்புகளில் ஓடும் ஜனநாயக உணர்வே இறுதியில் வெற்றி பெற்றது. சர்வாதிகார போக்கை ஜனநாயகத்தின் வழியில் வீழ்த்தியதற்கான உதாரணத்தை இந்த உலகில் வேறெங்கும் கண்டறிவது மிகவும் கடினமானது.

அவசர நிலை காலத்தில் நாட்டு மக்களின் போராட்டத்தைப் பார்த்தவனாகவும், அதில் பங்கேற்றவனாகவும் இருந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இன்று நாடு 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் நாம் அவசர நிலை காலத்தின் இருண்ட காலத்தை மறக்கக் கூடாது. வரும் தலைமுறையினரும் இதை மறக்கக் கூடாது" என்றார் பிரதமர்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஜூன் 25, 1975-இல் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பிறகு மார்ச் 21, 1977-இல் அது திரும்பப் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.