ராஜஸ்தானில் நூபுர் சர்மா ஆதரவாளர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விடியோவை ஊடகங்கள் காட்சிப்படுத்த வேண்டாம் என ராஜஸ்தான் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஹாவா சிங் குமேரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவை ஆதரித்ததாக தையல் கடை நடத்திவருபவரைக் கொடூரமான முறையில் கொன்றதாக இருவரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்திவரும் கண்ணையா லால் என்பவர் நூபுர் ஷர்மாவை ஆதரவாளர் எனத் தெரிகிறது. அவர் தன்னுடைய முகநூலில் நூபுர் ஷர்மாவை முகப்புப் படமாகவும் வைத்துள்ளார். மேலும் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பதிவில் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தையல் கடை உரிமையாளர்
இந்நிலையில் அவரது கடைக்கு வந்த இருவர், அவரிடம் துணிக்கு அளவு கொடுப்பது போன்று நடித்து பிறகு கத்தியைக் கொண்டு தாக்க ஆரமித்துள்ளனர். இதனை ஒருவர் விடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் தையல் கடை உரிமையாளரை கத்தியைகைக் கொண்டு சரமாறியாக வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்களும் படுகாயம் அடைந்தனர்.
Rajasthan Policeman injured in stone pelting by a Muslim Mob. #Udaipur #HindusUnderAttackInIndia #JusticeForKanhaiyaLal #IslamicTerrorismInIndia #Islamophobia #Islam #Viral pic.twitter.com/jsJ85APZ1S
â The Garud Updates (@GarudUpdates) June 28, 2022
இதனால் உதய்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், 600 காவலர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமாக இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கெளஸ் முகமது, ரியாஸ் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உதய்பூரில் நடந்த இந்த கொடூர சம்பவத்துக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா! புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!

வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!

திருமணம் குறித்து மனம் திறந்தார் சாரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK


