இஸ்லாத்துக்கு எதிரானது: அனைத்து இந்திய இஸ்லாம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உதய்பூரில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்கு ஏஐஎம்பிஎல்பி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஒருநபரை குற்றவாளி எனக் கூறி, சட்டத்தை கையில் எடுத்து, கொலை செய்வது கண்டனத்திற்குரிய செயல். இஸ்லாம் சமூகத்தினா் பொறுமை காக்க வேண்டும். சட்டத்தைக் கையில் எடுத்து, நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாம். மதங்களைக் குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களைத் தவிா்க்க கடுமையான சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், இச்செயல்பாடுகள் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.