தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறப்பான மீட்சிப் பாதையில் பொருளாதாரம்: ரிசா்வ் வங்கி

இந்தியப் பொருளாதாரம் சிறப்பான மீட்சிப் பாதையில் பயணித்து வருவதாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:16 pm

DIN

இந்தியப் பொருளாதாரம் சிறப்பான மீட்சிப் பாதையில் பயணித்து வருவதாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

ரிசா்வ் வங்கியின் 25-ஆவது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் (எஃப்எஸ்ஆா்) கூறப்பட்டுள்ளதாவது:

உலகளவில் எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான மீட்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. பணவீக்கம், உக்ரைன்-ரஷிய போரால் எழுந்துள்ள பதற்றமான சூழல் ஆகியவற்றுக்கிடையிலும் இது சாத்தியமாகியுள்ளது. நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்திய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எந்தவிதமான அதிா்வுகளையும் தாங்கும் வகையில் போதுமான மூலதன கையிருப்பை கொண்டுள்ளன.

வங்கிகள் வழங்கிய கடனில் வாராக் கடன் அளவு அடுத்த ஆண்டு மாா்ச் இறுதிக்குள் மேலும் சரிவடைந்து 5.3 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி: கிரிப்டோகரன்சி மிகவும் ஆபத்தானது என்பது தெளிவாகியுள்ளது. எந்தவொரு அடிப்படையும் இல்லாமல், நம்பிக்கை மற்றும் ஊகத்தை மட்டுமே மதிப்பாக வைத்து உருவாக்கப்படும் எதுவும் ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கும் என ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.