புதுவையில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆகக் குறைவு
புதுவையில் கரோனா தொற்று நோய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆக உள்ளது.


புதுவையில் கரோனா தொற்று நோய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆக உள்ளது.
யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு மட்டுமே கரோனா பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,726 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஜி ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் 3 பேரும், யானத்தில் 2 பேரும், காரைக்கால் ஒருவருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. மாஹேவில் புதிதாக எந்த தொற்றும் பதிவாகவில்லை.
தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 100 ஆகக் குறைந்துள்ளது. 10 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 90 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 24 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், ஒட்டுமொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,63,664 ஆக உள்ளது.
சுகாதாரத்துறை இதுவரை 22,16,254 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளதாகவும், அவற்றில் 18,61,119 மாதிரிகள் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிதாக இறப்பு பதிவாகவில்லை. இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 1,962 ஆக உள்ளது. சுகாதாரத்துறை இதுவரை 15,92,350 டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளது என்று இயக்குநர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...