உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு: ஒரே இரவில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

தில்லி உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 2:02 pm IST

தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு சுமார் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த தில்லி உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4ஆம் தேதி பொதுமக்களுக்காக உயிரியல் பூங்கா மூடப்பட்டது மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமும் முடக்கப்பட்டது. 

இதுகுறித்து பூங்காவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

நேற்றிரவு உயிரியல் பூங்காவின் ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்காக 
இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. ஒரே இரவில் 4 ஆயிரம் டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. 

மக்களின் சிரமத்தைத் தவிர்க்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியைச் செய்துள்ளது. 

காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மதியம் 12:30 முதல் மாலை 4:30 மணி வரை என்று ஒரு நாளில் 4,000 பார்வையாளர்கள் மட்டுமே மிருகக்காட்சிசாலையில் இரண்டு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு நிர்வாகம் அனைத்து பிரிவு மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.