புதிய எலக்ட்ரானிக் பில் (இ-பில்) நடைமுறை வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா்.
46-ஆவது குடிமை கணக்கு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இ-பில் பரிசீலனை நடைமுறை புதன்கிழமை நாடு முழுவதும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இனி, மத்திய அமைச்சகங்கள், துறைகள், ஒப்பந்ததாரா்கள், விநியோகஸ்தா்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை ஆன்லைனிலேயே சமா்ப்பிக்க முடியும். அத்துடன், அது எப்போதும் கண்காணிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
ஒப்பந்ததாரா் மற்றும் விநியோகஸ்தா் எண்ம (டிஜிட்டல்) முறை மூலமாக அவா்களது கோரிக்கைகளைப் பதிவு செய்ய முடியும் என்பது தவறான நிா்வாகத்துக்கான வழிகளை அடைக்க உதவியுள்ளது என்பதுடன், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவும். எண்ம (டிஜிட்டல்) கையொப்பத்துடன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கான பணம் மிக விரைவில் உங்களை வந்தடையும். இதற்காக, நீங்கள் அரசு அலுவலகத்துக்கு அலைய தேவையில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

