நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியா

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

News image

ருமேனியாவிலிருக்கும் சுமார் 4,000 இந்திய மாணவர்கள் : சிந்தியா

Updated On :3 மார்ச் 2022, 12:38 pm

IANS


புது தில்லி: ருமேனியாவிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

ருமேனியாவிலிருந்து காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் தற்போது சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்கள் இன்னமும் 3 நாள்களில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

புசாரெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு புதன்கிழமை 6 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுபோலவே, வியாழன் மற்றும் வெள்ளியன்றும் தலா 6 விமானங்கள் இயக்கப்படும், அந்த வகையில் புதன்கிழமை மட்டும் 1,300 மாணவர்கள் இந்தியா திரும்பினர் என்றார் மத்திய அமைச்சர்.

மேலும், ஜோதிராதித்யா சிந்தியா, ருமேனியாவில் 2 நாள்கள் தங்கியிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.