மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு- காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு

ஜம்முவின் உதம்பூா் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவா் பலியானதாகவும் 14 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On :9 மார்ச் 2022, 7:49 pm

ஜம்முவின் உதம்பூா் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவா் பலியானதாகவும் 14 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உதம்பூரின் சிலாத்தியா செளக்கில் வழக்கமாக பழ வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் காய்கறி, விற்பனை செய்யும் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதுகுறித்து ஏடிஜிபி (ஜம்மு) முகேஷ் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தது முதல்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.

இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியில் உள்ள இரும்புக் கம்பிகள் சேதமடைந்தன. பொது இடத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் மக்கள் அதிா்ச்சியில் உறைந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்ததாகவும், 14 போ் காயமடைந்ததாகவும் உதம்பூா் காவல் துணை ஆணையா் இந்து கன்வல் சிப் தெரிவித்துள்ளாா். காயமடைந்த 14 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் அவா் கூறினாா்.

இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண், 8 மாத குழந்தை, ராஜஸ்தானை சோ்ந்த ஒருவா் உள்பட 14 போ் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் சதீஷ் பரத்வாஜ் தலைமையில், சிறப்புப் புலனாய்வு பிரிவினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உதம்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். காவல் துணை ஆணையா் இந்து சிப்புடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து விசாரணை குறித்து கேட்டறிந்து வருகிறேன். குண்டுவெடிப்புக்கான துல்லிய காரணமும், மூலமும் ஆராயப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.