பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவில் உள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகின்றன.
வாக்கு எண்ணிக்கை இரண்டாம் சுற்று முடிவில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பஞ்சாப்சி மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 2 ஆம் இடத்தில் உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜீவன் ஜோத் கௌர் முன்னிலையில் உள்ளார். மூன்றாம் இடத்தில் சிரோமணி அகாலி தள வேட்பாளர் இருக்கிறார்.