பஞ்சாப் மக்களின் புரட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கினர். தற்போது மொத்தமுள்ள 117-இல் 90 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
பஞ்சாப் மக்களின் புரட்சிக்கு வாழ்த்துக்கள் என பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பக்வத் மானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.