பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார்.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பட்டியாலா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட அமரீந்தர் சிங் காலை 9 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.