மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாஜகவுக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை: ஹரிஷ் சிங் ராவத்

"மக்கள் மாற்றத்திற்கு வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் முயற்சியில் பற்றாக்குறை இருந்திருக்க வேண்டும், அதை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்"

News image
ஹரிஷ் ராவத் (கோப்புப்படம்)
Updated On :10 மார்ச் 2022, 11:39 am

DIN

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. இதன் மூலம் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

ஆனால், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல, லால்குவான் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹரிஷ் சிங் ராவத் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து பேசியுள்ள ஹரிஷ் சிங் ராவத், "உத்தரகண்ட் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான எங்கள் முயற்சிகள் கொஞ்சம் குறைவாகவே இருந்தன. 

மக்கள் மாற்றத்திற்கு வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் முயற்சியில் பற்றாக்குறை இருந்திருக்க வேண்டும், அதை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். 

எங்களின் பிரசார உத்தி போதுமானதாக இல்லை. பிரச்சாரக் குழுவின் தலைவராக அதை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் நன்றாக வேலை செய்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை, ஆனால் எனது மகளையும் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களையும் வாழ்த்த விரும்புகிறேன். 

என்னைப் பொறுத்தவரை, முடிவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய பணவீக்கத்திற்குப் பிறகு, இது பொது மக்களின் தீர்ப்பாக இருந்தால், மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வரையறை என்ன? இதற்கு பிறகும் மக்கள் 'பாஜக வாழ்க' என்று சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.