உத்தரகண்டில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ஹரிஷ் ராவத்
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.


உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹரிஷ் ராவத் வெளியிட்ட செய்தியில்,
உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ளேன். அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் அனைத்தும் தெரிந்துவிடும். மக்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன். காங்கிரஸ் 48 இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன் என்றார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...