நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 4,184 பேருக்குத் தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 4,184 பேருக்குத் தொற்று
Published on
Updated on
1 min read

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  4,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 4,184 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,29,72,009 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,459-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 6,554 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,20,120 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.70 சதவிகிதமாக உள்ளது. 
தற்போது 44,488 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.10 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.48 சதவிகிதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 0.58 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 179.53 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,23,329 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com