வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மகாராஷ்டிராவுக்காக பாஜக இன்னும் 2.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்: சரத் பவார்

பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2022, 10:05 am

DIN

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக, பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக பிரதான எதிர்கட்சியான ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 இடங்களில் முன்னிலைவகித்துவருகிறது.

தில்லியில் மட்டுமே ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மிக்கு முதல்முறையாக பஞ்சாப் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் இடத்தை ஆம் ஆத்மி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "பஞ்சாப் மக்கள் பாஜக மற்றும் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். 

பஞ்சாப் விவசாயிகளின் இதயங்களில் பிரதமர் மோடிக்கு எதிரான கோபம் உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக 2.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.